tamilnadu

img

100 டன் துருக்கி வெங்காயம் வீண்

சென்னை,பிப்.29-    துருக்கியிலிருந்து இறக்குமதி செய் யப்பட்ட 100 டன் வெங்காயத்தை பொது மக்கள், சில்லரை வியாபாரிகள்  வாங்குவ தற்கு ஆர்வம் காட்டாததால் பல கடைகளில் தேங்கி அழுகும் நிலையில் உள்ளது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து தினசரி வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கடுமை யாக பாதிக்கப்பட்டது வெங்காயம் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்தது. இதையடுத்து கிலோ ரூ.25-க்கு விற்ற  வெங்காயத்தின் விலை திடீரென அதிக ரித்து கிலோ ரூ.180 வரை மொத்த விற்பனை யில் விற்கப்பட்டது. வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக வெங்கா யம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

மேலும் எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய  நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இதையடுத்து வெங்கா யத்தின் விலை படிப்படியாக குறைந்தது. சனிக்கிழமை (பிப்.29) மொத்த விற்ப னையில் மகாராஷ்டிரா வெங்காயம் ரூ.22-க்கும் ஆந்திரா வெங்காயம் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துருக்கி, எகிப்து, ஈரான், ஹாலந்து ஆகிய  நாடுகளில் இருந்து ஏற்கனவே கடந்த டிசம்  பர் மாதம் இறுதியில் ஆர்டர் செய்த வெங்கா யம் கப்பல் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் வந்து தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்  யப்படுகிறது. எனினும் பொதுமக்கள், சில்லரை வியாபாரிகள் மற்றும் ஓட்டல் சமை யல் தேவைகளுக்கு வெளிநாட்டு வெங்கா யம் வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்ட வில்லை. இதன் காரணமாக அந்த வெங்காயம் பல கடைகளில் தேங்கி அழுகும் நிலை யில் உள்ளது. மேலும் மார்க்கெட்டில் நடை பாதை வியாபாரிகள் இறக்குமதி வெங்கா யத்தை கூறு கட்டி விற்பனை செய்து வரு கின்றனர்.